2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஐவர் இடைநீக்கம்

Editorial   / 2018 மே 24 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய, போதைப்பொருள் வர்த்தகர், நாட்டைவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளனவென சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

கைதி, தப்பிச் செல்வதற்கு உதவி ஒத்தாசை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஐவர், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்ஹ தெரிவித்தார்.

தப்பியோடுவதற்காக, சிறைச்சாலைக்குள்ளிருந்து கைதிக்கு ஆதரவு கிடைத்துள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தப்பியோடிய கைதி, ‘அடோமுபயே’ எனும் போதைப்பொருளை மறைத்துவைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், ​​சோதனைக்கு உட்படுத்துவதற்காக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடமிருந்து 11.5 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது எனினும், அவர், கடந்த 5ஆம் திகதியன்று தப்பியோடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .