2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிலாபம் நகரில் நடைப்பாதைகளிலுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

சிலாபம் நகரில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பெயர்ப் பலகைகளை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

நகரில் காணப்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் ஒரு முன்னெடுப்பாக இதனை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நடைப்பாதைகளில் வர்த்தக நிலையப் பெயர்ப்பலகைகளை வைத்திருப்பதனால், பாதசாரிகள் நடைபாதையில் பயணிக்காது பிரதான வீதியில் பயணிக்கின்றனர் எனவும், இதனால் அதிகரித்த வாகன நெரிசல் ஏற்படுவதாகவும், விபத்துக்கள் நேரிடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் முதலில் வியாபாரிகளுக்கு தெளிவூட்டல்கள் மற்றும் ஆலாசனைகளை  வழங்கப்படுவதுடன், அதற்கமைய அவர்கள் செயற்படாவிட்டால் வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் மாதம்பே ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸார் இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .