2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

சீ.ஐ.டியில் ஆஜரானார் ஷிரந்தி ; எப்.சீ.ஐ.டீயில் ரோஹித

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(சீ.ஐ.டி), இன்று (15) காலை ஆஜராகியுள்ளார்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்கே, அவர் அழைக்கப்பட்டுள்ளார் என, அறியமுடிகிறது.  

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ எம்.பியின் புதல்வர்களில் ஒருவரான  ரோஹித ராஜபக்ஷவும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (எப்.சீ.ஐ.டீ) ஆஜராகியுள்ளார்.

சீனாவின் சுப்ரீம் சட் 1 என்ற செய்மதி செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கே ரோஹித  அழைக்கப்பட்டுள்ளார். அவர், அங்கு பொறியியலாளராகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X