2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீனியை அதிக விலைக்கு விற்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனியை அதிக விலைக்கு விநியோகிப்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறான இறக்குமதியாளர்களின் இறக்குமதி வசதிகளும் இடைநிறுத்தப்படுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலக சந்தையில்  சீனியின் விலை குறைவடைந்துள்ளதால், அதன் இறக்குமதி விலையில் ஒரு கிலோகிராமுக்கு 52 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் உலக சந்தையில் சீனியின் விலை மிகவும் குறைவடைந்து செல்கின்ற நிலையில், புதிய வரி அறவீடானது முன்பை விட ஒரு கிலோகிராம் சீனிக்கு 9 ரூபாய் இலாபம் பெறும் நிலை இறக்குமதியாளர்களுக்கு கிடைப்பதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .