2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களில் 68,343 பேர் பாதிப்பு: 9 பேர் உயிரிழப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 22 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக இதுவரை 68,343 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த அனர்த்தங்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேகாலை, பொலன்னறுவை, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலேயே இவ்வாறு உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்தின் காரணமாக நால்வரும், கடுங் காற்றினால் மூவரும், மண்மேடு சரிவினால் ஒருவரும், நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 18,079 குடும்பங்களைச் சேர்ந்த 68,343 பேர் பாதிப்புகளை எதிர்ககொண்டுள்ளதாக மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த சீரற்ற காலநிலையால், 25 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 1464 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அதற்கமைய, தற்சமயம் 168 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 6710 குடும்பங்களைச் சேர்ந்த 24, 187 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .