Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 24 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏழுபேர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. அந்தச் சந்திப்பில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஐவரும், பிரதியமைச்சர்கள் இருவரும் இருந்ததாக அறியமுடிகின்றது.
கம்பஹா பிரதேசத்தில் வைத்தே, இந்தச் சந்திப்பு மிகவும் இரகசியமான இடமொன்றில், கடந்த வாரத்தின் இறுதியில் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, இந்த எழுபேரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் சந்தித்து கலந்துரையாடியதாக அந்தத் தகவல் தெரிவித்தது. தாங்கள் ஏழுபேரும், செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திலிருந்து விலகபோவதாகவும், அதற்கான காரணங்களையும் இந்தச் சந்திப்புகளின்போது தெளிவுப்படுத்தியதாக அறியமுடிகின்றது.
அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைக்க, அந்த ஏழுபேரும் தீர்மானித்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தை தயாரிப்பது தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. ஜனாதிபதிக்கு, கடிதத்தை அனுப்பி வைத்ததன் பின்னர், ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு, அந்த ஏழுபேரும் தீர்மானித்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024