2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுகாதார அமைச்சுக்குள் அட்டகாசம் : இரு மாணவர்கள் கைது

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், இன்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மாணவர்கள், சியம்பலாண்டுவ மற்றும் கட்டான ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதானவர்கள் என, விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக, பொலிஸார் கூறினர்.

இவர்களில் ஒருவர், கலைப் பீட மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவர் எனவும் சியம்பலாண்டுவ - கொட்டியாகல பிரதேசத்தில் தனது வீட்டில் மறைந்திருந்த போதே, கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மற்றைய மாணவர், மருத்துவப் பீட மாணவத் தலைவர் எனவும் ராகம மருத்துவப் பீடத்தைச் சேர்ந்தவர் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை இன்று சியம்பலாண்டுவ மற்றும் மாலிகாகந்தை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X