Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்களிடமிருந்து கிடைத்திருக்கும் செய்திக்கு ஏற்ப அரசாங்க நடவடிக்கைகளில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுப்படும் என்றும் கூறினார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், இரண்டாவது மாற்றம் நேற்று (25) மேற்கொள்ளப்பட்டது. இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அங்கு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“சில அமைச்சுகளின் விடயப்பரப்புகள் எதிர்காலத்தில் திருத்தப்பட்டு மிகவும் பொருத்தமான நிறுவனங்களின் கீழ் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் மறுசீமைப்பு எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க கூட்டுத்தாபனம், சட்டவாக்க சபைகளின் நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொள்வதற்கு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டு மக்களிடமிருந்து கிடைத்திருக்கும் செய்திக்கு ஏற்ப அரசாங்க நடவடிக்கைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago