2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதி படுகொலை முயற்சி; இந்திய பாதுகாப்புப் பிரிவினர் அவதானம்

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்கு, தமக்கு வாய்ப்பளிக்குமாறு, இந்திய பாதுகாப்புப் பிரிவினர், இலங்கை அரசாங்கத்திடம், விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக, இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில், ஜனாதிபதிச் செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .