2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி வேட்பாளர்: கோட்டாபய மறுப்பு

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

மேற்படி விவகாரம் தொடர்பில், தன்னுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளில், பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கையில், 2020 ஜனாதிபதி வேட்பாளராக, என்னுடைய பெயர் இருப்பதாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் பொய்யானதாகும்”

“மக்களை திசைதிருப்பி, குழப்பமான அரசியல் நிலைமையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே, இந்தச் செய்தி அமைந்துள்ளது.  அரசியலில் குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் முயற்சியாகவே நான் பார்க்கின்றேன்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .