2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளரையும் களமிறக்குவோம்’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆவது அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது போனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோமென, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது பிரதான முயற்சி 20ஆவது திருத்தத்தின் ஊடாக இந்த நிறைவேற்று அதிகாரமுடைய நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகும். மார்ச் 5ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலம் உள்ளது. அதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது போனால் கண்டிப்பாக நாம் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X