2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இம்ரான்

J.A. George   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கு இடையிலான விசேட இருதரப்பு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏதுவான பல விடயங்கள் தொடர்பாக வெற்றிகரமான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலீடு, வர்த்தக மேம்பாடு, விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 5 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .