2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜெனீவா பறந்தது சரத் வீரசேகர குழு

Kamal   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தினர் யுத்தகுற்றம் செய்யவில்லை என வலியுறுத்துவதற்காக, ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று இன்று (18) ஜெனீவா பயணமாகியுள்ளது.

இந்நாட்டு இராணுவத்தினர் சார்பில் ஜெனீவாவில் நாளை  மறுதினம் (20) உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதெனவும், இவ்வாறு ​4 ஆவது தடவையாக உரையாற்ற போவதாகவும் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த அமர்வில் டுபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கையரை பிரதிநிதித்துவப்படும் குழுக்கள் இரண்டும் கலந்துகொண்டு இராணுவ தரப்பு நியாயங்களை எடுத்துரைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .