2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஞானசாரருக்கு பொது மன்னிப்புக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள சகல பௌத்த மத பீடங்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம், அமரபுர மஹா நிக்காய ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களின் கையெழுத்துடன் குறித்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தலதா மாளிகையின் தியவதனே நில​மே பிரதீப் நிலங்கவும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X