2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஞானசாரர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை நீக்கி தன்னை விடுதலை செய்யுமாறு, ஞானசார தேரர் இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஞானசாரரின் மனு, இம்மாதம் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த போதிலும், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள​மை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .