2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெங்கு நோயை கட்டுப்படுத்த புதிய பக்டீரியா

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென புதிய பக்டீரியாவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வோல்பாச்சியா எனப்படும் பக்டீரியாவை சுற்றுச்சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பை சூழவுள்ள 25 கிராம சேவகர் பிரிவுகளில் பக்டீரியா விடுவிக்கப்படும். குறித்த வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிகவடன கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .