2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டி.பி தொடர்பில் விசாரணை

Thipaan   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

காணி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட இராஜாங்க அமைச்சருமான டி.பி.ஏக்கநாயக்க தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (10) அறிவித்தனர்.   

2012ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், டி.பி.ஏக்கநாயக்க, கலை மற்றும் கலாசார அமைச்சராக இருந்தார்.

அதன்போது, மத்திய கலாசார நிதியத்தின் நிதியில், கப் வாகனமொன்றைக் கொள்வனவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X