2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டுபாயிலிருந்து மேலுமிருவர் நாடு கடத்தப்பட்டனர்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல ​போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர், நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும், யு.எல். 226 எனும் விமானத்திலேயே நாடு கடத்தப்பட்டனர். அந்த விமானம், இன்று காலை 5:55க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, பியல் புஷ்ப குமார, மொஹமட் அஸ்ரிடீ மொஹமட் இன்ஹாம் ஆகிய இருவரிடமும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X