2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டொனியர் ரக விமானத்தை இலங்கைக்கு வழங்கவுள்ள இந்தியா

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், டொனியர் ரக கண்காணிப்பு விமானமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை  இந்தியா முன்னெடுத்து வருகிறதென, இந்தியாவின் டைமஸ் நியு செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் மாத்திரமின்றி தென் ஆசியாவின்  அனைத்து நாடுகளுடனும் தமது பாதுகாப்பு உறவை ​மேலும் பலப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள டோனியர் விமானமானது ஜேர்மனின் அனுமதிப்பத்திர உரிமையுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் கடல், கடற்கரை பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியுமென இந்தியா குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .