2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேங்காயைத் திருடியவருக்குப் பிணை

Nirosh   / 2021 ஜனவரி 19 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து, 120 ரூபாய் பெறுமதியான தேங்காய் ஒன்றைப் திருடிய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த இந்த சந்தேகநபர் இன்று (19) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே அவரை ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க கம்பஹா நீதவான் மஞ்சுல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 18ஆம் திகதி மீண்டும் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .