2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’தடுப்பூசிக்காகப் போராட வேண்டியுள்ளது’

Nirosh   / 2021 மே 18 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் உலக அளவில் பாரியக் கேள்விகள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல, தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

இதுத் தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் நிதிப் பிரச்சினை இலங்கைக்கு இல்லை எனவும் கூறிய அவர், இந்தத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாரியப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் கூறும் அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .