2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Editorial   / 2020 மே 31 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் இரண்டு துப்பாக்கிகளும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில், அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு இலக்கம் இரண்டு நீதவான் முன்னிலையில் இன்று (31) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .