2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’தமிழ்த் தலைமைகளுக்கு சம்பிக்க ஆதரவு’

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மையினத் தலைமைகளுக்கான ஆதரவாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே, அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார் என, அமைச்சர் மனோ கணேசன் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில், நேற்று (17) கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்விடயத்தை அமைச்சர் குறிப்பிட்டார்.

"மிதவாத சிறுபான்மையினத் தலைவர்களுக்கான தனித்த ஆதரவுக் குரல், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடமிருந்தே, அமைச்சரவையில் கிடைத்தது. அவர், ஒழுங்காகச் செவிமடுக்கப்படவில்லை. ஆனால் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், 'ஜனநாயக தமிழ்த் தலைமைகளைப் பலப்படுத்தத் தவறாதீர்கள். அவர்களைப் பலவீனப்படுத்தாதீர்கள்' என்று கூறினார்" என, அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் சம்பிக்கவின் இக்கருத்து, நேற்று முன்தினம் (16) இரவு, தனது டுவிட்டரில், பெரும்பான்மையினத் தலைவர்கள் மீது அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்ட கருத்தோடும் ஒத்துப் போயிருந்தது.

"பச்சை+நீல கட்சி சிங்களத் தலைவர்கள், ஜனநாயக தமிழ்த் தலைவர்களையும் கட்சிகளையும், பலப்படுத்த விரும்புவதில்லை. தம் இருப்புக்காக, தமிழ்த் தீவிரவாதத்தை வளர்த்துவிடவே, இவர்கள் விரும்புகிறார்கள்" என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .