2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தேர்தல் நடவடிக்கையில் இராணுவம் தலையிடாது’

J.A. George   / 2020 ஜூலை 15 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் நடவடிக்கையில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை என, இராணுவ தளபதி  லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (15) முற்பகல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக்கு கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய செயற்படுவது பொலிஸார் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பொலிஸார் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லாமல் தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதற்கு இராணுவத்துக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .