2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘தற்போதைய அரசாங்கம் யாருக்காக செயற்படுகின்றது? ‘

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்காகவா அல்லது வெளிநாட்டுக்காகவா செயற்படுகிறதென, சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஆலோசகரொருவருக்கு அமெரிக்க அரசாங்கம் சம்பளம் செலுத்துவதாகவும் நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும், இவ்வாறு வெளிநாட்டிலிருந்து  சம்பளம் பெறுபவர்கள் இருப்பதாகவும் அவ்வாறனவர்களுள் சிறந்த நிபுணத்துவம் உள்ளவர்களிடமிருந்து, ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தாலும் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து சம்பளம் பெறுபவர்கள் குறித்த நிறுவனங்களில் இருப்பது யாருடைய தேவைக்காக​ என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

இன்று கொடிகாவத்த- முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப்  போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .