2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தலாவயில் கொள்ளை: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Editorial   / 2018 ஜூலை 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுர - தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாடியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அநுராதபுர மாவட்டத்திலுள்ள தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பணமும் தங்க ஆபரணங்களும் அண்மையில் கொள்ளையிடப்பட்டது.

களவுபோன ஆபரணங்களுக்கு பதிலாக அவற்றை போன்ற ஆபரணங்களை செய்து தருமாறு சில வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் வங்கி முகாமைத்துவம் தலைமையகத்துக்கு அறிவித்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தையில் நிலவும் பவுண் பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X