2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் உயிரிழப்பு

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவரொருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சிலாபம் – சவராண முஸ்லிம் வித்தியாலயத்தில், தரம் 11 இல் கல்வி கற்ற மொஹமட் வைஸ்ஸூல் (வயது 16) என்ற மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையின் பிரதான மாணவ தலைவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 15ம் திகதி இரவு மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பிய போது அவரை மறித்த மாணவர்கள் சிலர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன்போது , குறித்த மாணவன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாணவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .