2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாக்குதலுக்கு இலக்கானார் மகாசோன் பலகாய தலைவர்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 27 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கண்டி நிர்வாக மாவட்டத்தில்  கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரே அமித் வீரசிங்க மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .