2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திகன வன்முறை; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி- திகன பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 38 பேரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (23) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .