2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திகாம்பத்தன விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2018 ஜூலை 18 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ள-ஹபரணை பிரதான வீதியில் திகாம்பத்தன கடற்படை முகாமுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். அத்துடன், இந்த சம்பவத்தில் மேலுமிருவர் படுகாயமடைந்தனர்.

லொறியொன்றும், கெப்ரக வாகனமொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமாலை இடம்பெற்ற இந்த விபத்துதொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும், 49 வயதான திஸ்ஸங்க பண்டார என்பவரே பலியாகியுள்ளாரென அடையாளம் காணப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .