2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தில் வயோதிப பெண் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜகிரிய , களபலுவாவ பகுதியிலுள்ள வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் வயோதிப பெண் ஒருவர் நேற்று (22) உயிரிழந்ததாக வெலிகடப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 83 வயதான வயோதிப பெண்ணொருவரே  உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருடன் வசித்துவந்த 52 வயதான மகளுக்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் வெலிகடப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X