2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 22 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீப்பெட்டிகள் உற்பத்திக்கு தேவையான மருந்துகள் இல்லாமைக் காரணமாக, நாளைத் தொடக்கம் (23) தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பான தீப்பெட்டிகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு இதற்குத் தேவையான மருந்துகளை சரியான முறையில் கொண்டு வராமைக் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

தீப்பெட்டி மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டவுடன், அரசாங்கம் மருந்துப் ​பொருட்களைக் கொண்டு வந்துத் தருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இதனால் நாட்டில் தீப்பெட்டி பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியாதென்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .