2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தீயினால் 16 கடைகள் சேதம்

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயினால், அப்பகுதியிலிருந்த ஏனைய 16 வர்த்தக நிலையங்களும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த தீயினை கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு, தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து, தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அப்பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என, பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புறக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .