Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 24 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அபிவிருத்தி உதவியாளர் உட்பட ஆறு பேரை, ஹொரவப்பொத்தானயின் கிவுலேகட மற்றும் கெப்பத்திகொல்லாவயின் எல்லேவ ஆகிய பிரதேசங்களில் வைத்து, இன்று (24) கைதுசெய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவப்பொத்தான பிரதேச செயலகத்துடன் இணைந்ததாகப் பணியாற்றிவந்த, கிவுல்கட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கெபித்திகொல்லாவ - எல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருமே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில், முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தியுள்ளார்கள் என்றும் உயிரத்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு, தற்போது வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் பிரதான சந்தேகநபரொருவருடன், இவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார்கள் என்றும், அவரிடமிருந்து, இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ளார்கள் என்றும், விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக, பொலிஸார் கூறினர்.
இச்சந்தேகநபர்களை, உரிய விசாரணைகளின் பின்னர், நாளைய தினம் (25), கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு, 72 மணிநேரங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான அனுமதி பெறப்படுமென, பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago