2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம், கிரிவெ​​ஹேர ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்க கொபவக தம்மிந்த தேரர் மீதும் மற்றொரு ​தேரர் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பல்கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விகாரைக்குள் நுழைந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் மூவர், தேரர்கள் இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தேரர்கள் இருவரும், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .