2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேர்தலைக் கோரி உயர்நீதிமன்றம் செல்லும் முன்னாள் முதலமைச்சர்கள்

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் ​தேர்தலை நடத்துமாறுக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு​தொடரவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சி தீர்மானித்துள்ளதாக வட மத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் வாரத்துக்குள் வடமத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களுடன் இணைந்து வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 4 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு ஒரு வருடமும் 4 மாதங்களும் கழிந்துள்ளதாகவும் வட மத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .