2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொடர்ந்து கண்டியில் பழுதாகும்: இந்திய பிரதானிகளின் ஹெலிகொப்டர்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய விமானப்படையின் பிரதானியான எயார் சீப் மார்ஷல் பிரேந்திர சிங் பயணித்த ஹெலிகொப்டர் இன்று கண்டியில் பழுதடைந்துள்ளது.

இன்று(13) கண்​டி தலதா மாளிகைக்கு வருகைத் தந்த இவரது ஹெலிகொப்டர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதையடுத்து,இவர் மற்றொரு ஹெலிகொப்டர்  மூலம் திரும்பிச் சென்றுள்ளார்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான குறித்த ஹெலிகொப்டர் கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் இலங்கைக்கு வருகைத் தந்து தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்கு சென்ற போது அவர் பயணித்த இந்திய விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர்  ,இயந்திரக்​கோளாறு ஏற்பட்ட நிலையில் கண்டியில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X