2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தௌஹித் ஜமாத்தின் இருவர் சிக்கினர்

Editorial   / 2019 மே 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் என கருத்தப்படும் இருவர், ஹொரவப்பத்தனையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹொரவப்பத்தன பத்தேவ பிரதேசத்தைச் சேர்ந்த மொஹொமட் அத்தர் ரசுல் (வயது 56), அப்துல் ஜபார் நிஜாப் (வயது 47) ஆகிய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் ஹொரவத்தப்பத்தனையிலுள்ள இரு பாடசாலைகளில் கடமையாற்றும்  அதிபர், ஆசிரியர்களென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புலானாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலின் தற்கொலைதாரியான மொஹமட் சஹ்ரானின் நெருங்கிய நண்பர்களென்றும் கடந்த காலங்களில் கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விரிவுகைளில் அவ்விருவரும் பங்கேற்றுள்ளனர் என்றும் புலனாய்வுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இருவரும் கெபத்திகொல்லாவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவ்விருவரையும் 3 நாள்கள் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X