2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ந​கைகளை கொள்ளையிட்ட பெண் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பகுதியிலுள்ள நகைக் கடை ஒன்றில், சூட்சுமமானமுறையில் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண்ணொருவர், ஹொரண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு மற்றுமொரு பெண்ணுடன் நகைக்கடைக்குள் நுழைந்து, நகைகளை கொள்வனவு செய்யும் போர்வையில் குறித்த பெண் ந​கைகளை கொள்ளையிட்டிருப்பதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து, கொள்ளையிடப்பட்ட 64 காதணிகள், 6 மோதிரங்க​ள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .