2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாட்டை வந்தடைந்தார் அஜித் டோவால்

J.A. George   / 2020 நவம்பர் 27 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் முக்கிய விஜயமொன்றை மேற்கொண்டு  நாட்டை வந்தடைந்துள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு  நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும், நாளையும் கொழும்பில் நடக்கவுள்ள முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் அஜித் டோவால் பங்கேற்பார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X