2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை கடும் மழை பெய்யும்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) மாலை கடுமையான பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கம் காணப்படும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும்.  200 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும். 

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .