Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 19 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நண்பனை தாக்கி, அவரது தேசிய அடையாள அட்டையை பறித்து அதனை மீள் தர வேண்டுமாயின் தமக்கு 5,000 ரூபாய் கப்பம் தர வேண்டும் என கோரிய மூவர், உடுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர், உடுகம தெற்கைச் சேர்ந்தவர் எனவும், அலுத்வத்த சந்தியில் வைத்தே சந்தேகநபர்கள் இவரை தாக்கி தேசிய அடையாள அட்டையை பறித்துக்கொண்டு பணம் கேட்தாகவும், அதனை தர மறுத்ததால் மேலும் அவரை தாக்கியுள்ளனர் எனவும், தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கானவர் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் சந்தேகநபர்கள் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago