2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நான்கு கொள்ளையர்கள் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்த நகரின் பல இடங்களிலும் இடம்பெற்ற திருட்டு, கொள்ளைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் பெலியத்த பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலியத்த நகரில் இடம்​பெற்ற 10 திருட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவலுக்கமைய, தனியார் அடகு நிலையத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 1 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .