2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நேற்றைய தொற்றாளர்களின் விபரங்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்றாளர்கள் 541 பேரில், அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 42 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்தும் கம்பஹா- 54, மஹர- 67, களணி-74, வத்தளை-8, மிரிஸ்வத்த-02, பேலியாகொட- 10, ஜாஎல- 74, உடுகம்பொல-1, கனேமுல்ல-2, கந்தானை-3, மினுவங்கொட- 09 பேர்  கம்பஹா மாவட்டங்களிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பு (1-15 ) 77 பேர், பியகம்- 63, கொடிகாவத்த-04, மொரட்டுவ-2, மோதர- 4, கடுவலை-1, கொட்டாஞ்சேனை-04, முல்லேரியா-2, மட்டக்குளிய-6, ​கொலன்னாவ-02, அங்கொட-2, கிரிபத்கொட-1, கோனவல- 01, ஒருகொடவத்த-2, பஞ்சிகாவத்த-01, கெசல்வத்த-1, வேபொட-3, கிரான்டபாஸ்-03, வெல்லம்பிட்டிய-12  பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கேகாலை மாவட்டத்தின் தெரணியகலையில் ஒருவரும் கண்டி- நாவலப்பிட்டியில் ஒருவர், பதுளை- ஹாலிஎல-01, புத்தளம்- தங்கொட்டுவையில் ஒருவரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .