2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி?

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் பரப்புரைகளுக்காக சீனா நிதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் விவாதம் தொடர்பில் சீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா கடந்த ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளுக்காக 7 மில்லியன் டொலர்களை வழங்கியதாக அண்மையில் தி நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் இராஜதந்திர ரீதியிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விசேட விவாதம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .