Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 17 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
“நல்லூர் கோவிலுக்கு குண்டு வைப்போம்” என எழுதப்பட்ட அநாமதேய கடிதமொன்று நல்லூர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், கோவில் வளாகத்தில், நேற்று (16) பரபரப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
‘நல்லூர் கோவிலுக்கு குண்டு வைப்போம்’ என எழுதப்பட்ட கடிதம் ஆலயத்துக்கு நேற்று (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தை ஆலய நிர்வாகத்தினர், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் பின்னர், நல்லூர் ஆலயத்தில் இராணுவம் உட்பட பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நல்லூர் பகுதியில் முஸ்லிம் வீடுகள் இரண்டு அமைந்துள்ளதால், அந்த வீடுகளை இராணுவத்தினர் சோதனையிட்டனர். அத்துடன், நல்லூர் பிரதேசத்திலுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள இராணுவம், அவர்கள் தொடர்பிலான தகவல்களையும் திரட்டி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Apr 2024
19 Apr 2024