2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற குழப்ப நிலை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு நவம்பர் மாதம் 14, 15, 18ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட  குழப்ப நிலைத் தொடர்பான அறிக்கை  சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 12.20 மணியளவில் இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழப்ப நிலைத் தொடர்பில் ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவால்,  பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் 6 ​பேர் அடங்கிய ​குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழப்ப நிலைத்  தொடர்பில் பாதுகாப்பு கமரா உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த விசாரணை அறிக்கையே இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .