2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடு கடத்தப்பட்ட 29 பேரும் தெற்கைச் ​சேர்ந்தவர்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 29 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

விசேட விமானம் மூலம் இவர்கள் இன்றைய தினம்(14) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

 நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் எஸ்.என்.டீ-1 என்ற விசேட விமானம் மூலம் இன்று காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஆண்களான குறித்த 29
பேரும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஹக்மன, தங்காலை ஆகிய பிரதேசங்களைச் ​சேர்ந்தவர்கள் என கட்டுநாயக்க விமானநிலைய குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 12 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .