2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'நான் மைத்திரியின் ஆள்'

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்  குழுக்களில் சேர்வதில்லை. முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து இராஜினாமா செய்துள்ளமை தொடர்பாக அவர்களிடமே கருத்துக் கேட்க வேண்டும். நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவைச் சேர்ந்தவனாவேன் என, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி எனக்கு ஆளுநர் பதவியை தந்தார். நான் பதவியை பொறுப்பேற்றேன். இதில் விசேடம் எதுவும் இல்லை. நான் நாட்டுக்கு சேவையாற்றவே வந்துள்ளேன். நான்    குழுக்களில் சேர்வதில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .