Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 19 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான, சனத் நிசாந்த பெரேரா மற்றும், அவரது சகோதரரான ஆரச்சிக்கட்டுவ பிரதேசசபையின் முன்னாள் தலைவரமான ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரையும், மே மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரை தாக்கியமைத் தொடர்பில், இவர்களுக்கு எதிராக, வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையுடனே இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறித்த இருவரும், பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடாத குற்றச்சாட்டுத் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago